--> -->

கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சள் கடற்படையினர் வசம்

ஜூலை 30, 2020

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இருபது பைகளில் பொதியிடப்பட்ட சுமார் 1,000 கிலோ மஞ்சளுடன் குறித்த சந்தேக நபரை மன்னார் கடலோரத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

மன்னார் கடற் பகுதியில் ரோந்து கடமையிலிருத்த இலங்கை கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய குறித்த சந்தேகநபரை சோதனையிட்ட பின்னரே இவ்வாறு கைது செய்துள்ளனர்.  

கைப்பற்றப்பட்ட மஞ்சள் பொதிகளை யாழ்ப்பாண சுங்கத்திணைக்களத்திடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதுடன், சந்தேகநபர் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக மன்னார் பொது சுகாதார பரிசோதகரிடத்தில்  ஆஜர்படுத்தப்பட்டார்.