--> -->

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் பொலிஸாரால் கைது

ஆகஸ்ட் 05, 2020

பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 'கெசல்வத்தை ரெய்னாவின் உதவியாளரை  பேலியகொட பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

பேலியகொட அதிவேக நெடுஞ்சாலை பாலத்தின் அருகே கைது செய்யப்பட்ட 27 வயதுடைய சந்தேக நபர், கொழும்பு 12, அக்பர் மாவத்தையில் வசிப்பவர் எனவும் கைது செய்யப்பட்டவேளை அவரிடம் 5.1 கிராம் ஹெரோயின், இரு கையடக்க தொலைபேசிகள்,19 சிம் அட்டைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பன காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.