--> -->

பாதாள உலக குற்றவாளி எஸ்.எப். லொக்கா சுட்டுக்கொலை

ஆகஸ்ட் 05, 2020

அநுராதபுரம், தஹய்யாகம சந்தியில் இன்று (05) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எஸ்.எப். லொக்கா என அழைக்கப்படும் இரோன் ரணசிங்க சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அவர் ஏனைய இருவருடன் இணைந்து கார் ஒன்றில் பயணித்த வேளையில் இனந்தெரியாத  நபரினால் துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதாகவும் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து அவர்கள் பயணித்த காரும் தீப்பிடித்துள்ளதாக பொலிசார் மேலும்  தெரிவித்தனர்.  

மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவரின் உடல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கி சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.