--> -->

பெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம்

ஆகஸ்ட் 05, 2020

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் காரணமாக இலங்கையர் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக  இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக குறைந்த பட்சம் நூறு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைதுள்ளனர்.

மேலும், வெடிப்புச் சம்பவம் காரணமாக அங்குள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெபனானில் 25000, இலங்கையர் வரை வசித்துவரும் நிலையில், இவர்கள் 24 மணித்தியாலமும் தூதரகத்தின் உதவியை நாடலாம் எனவும் இதற்காக விசேட தொலைபேசி இலக்கள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தூதரகம் விடுத்துள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.