--> -->

2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் அமைதியான முறையில் நிறைவு

ஆகஸ்ட் 05, 2020
  • 29 தேர்தல் விதி மீறல்களே பதிவு

இலங்கையின் 9வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் காலத்தின் போது தேர்தல் தொடர்பான 29 விதிமீறல்கள் பதிவாகியுள்ளதுடன்  34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 9 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த  12,985 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி  மாலை 5 மணி வரை இடம்பெற்றது.

தேர்தல் கடமைகளுக்காக நாடு முழுவதும்  3,000 பொலிஸ் நடமாடும் குழுக்கள் உட்பட  69,500 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்  ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.