--> -->

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் பதிவு

ஆகஸ்ட் 06, 2020

 

  • தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,839
  •  குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,537

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் இனங்காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்கள்  மொத்த எண்ணிக்கை 2,839 ஆக பதிவாகியது.

அடையாளங் காணப்பட்ட நோயாளிகளில் சென்னை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய மூவரும் அடங்குகின்றனர். மேலும், சேனபுர புனர்வாழ்வு மையத்தின் ஒருவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் ஒருவருடன் தொடர்பை பேணிய ஒருவரும் அடங்குகின்றனர்.

இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 13 பேர் வைரஸ் தொற்றில்  இருந்து குணமானதையடுத்து குணமடைந்தவரின் மொத்த  எண்ணிக்கை 2,537 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 290 நோயாளிகள் வைத்தியசாலைகளில்  தற்போது சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.