--> -->

பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

ஆகஸ்ட் 08, 2020

பெய்ரூட் வெடிப்பு சம்பவம் காரணமாக காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

காயங்களுக்கு உள்ளான 14 இலங்கையர்களும் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,000ஐ தாண்டியுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.

லெபனானில் ஏறத்தாழ 25,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழில் புரிந்து வருவதாகவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிப்பதற்காக இலங்கை தூதரகத்தினால் 24 மணிநேர தொலைபேசி சேவை செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய +961 5769585 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது slemb.beirut@mfa.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ கோரிக்கைகளை மேற்கொள்ள முடியுமென தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.