--> -->

மெளஸாகல மண்சரிவினால் ஏற்பட்ட போக்குவத்து தடைகளை அகற்றும் பணிகளில் இராணுவத்தினர்

ஆகஸ்ட் 10, 2020

நுவரெலிய,மெளஸாகல, மோகினி எல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தடைப்பட்ட போக்குவரத்து தடைகளை அகற்றும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் 19 வது தேசிய பாதுகாப்பு படைப் பிரிவு வீரர்கள் ஈடுபட்டனர்.

நேற்று காலை திடீரென ஏற்பட்ட மண்சரிவ காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 11 ஆவது பிரிவின் 112வது பிரிக்கேட்டின் கீழ் சேவையாற்றும் 19 வது தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், அப்பகுதியில் ஏற்பட்டிருந்த இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

மண்சரிவு காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து தடை நீக்கும் பணிகள் 19 ஆவது தேசிய பாதுகாப்புப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினென்ட் கேர்ணல் கே.என். குணவர்தனவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்க பட்டமை குறிப்பிடத் தக்கது.