--> -->

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2646 ஆக உயர்வு

ஆகஸ்ட் 13, 2020

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான  மேலும் எட்டுப்பேர் வைத்திய சாலைகளில் இருந்து  குணமடைந்து வீடுதிரும்பியதை தொடர்ந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2646 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பனாகொடை இராணுவ வைத்தியசாலையில் இருந்து ஒருவரும், வெலிக்கடை வைத்தியசாலையில் இருந்து ஏழு பேருமே இவ்வாறு குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 2881ஆக பதிவாகியுள்ள அதேவேளை கோரனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  11 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுகாதார அதிகாரிகளின் தகவல்படி 232 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்