--> -->

கடந்த இரண்டு மாதங்களுக்குள் சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், 21 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 17, 2020

ஜூன் மாதம் 10ஆம் திகதியிலிருந்து இன்று வரையான  கடந்த இரண்டு மாதங்களுக்குள்  சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், 21 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம் / புனர்வாழ்வு மற்றும் திறன் அபிவிருத்தி) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற புலனாய்வு அறிக்கைகளுக்கு அமைய பூசா, நீர்கொழும்பு, வாரியபொல மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளில் இருந்த சிறைச்சாலை அதிகாரிகளே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

தற்போது பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மிகவும் மோசமான பாதாள உலக குற்றவாளியும்  போதைபொருள் கடத்தல் காரருமான  கஞ்சிப்பானை இம்ரானை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் வணங்கும் காணொளிப்பதிவின் ஆதாரம் இருப்பதாக அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

 

Tamil