--> -->

டோஹா, டுபாய் மற்றும் ஐக்கிய இராச்சிய நாடுகளிலிருந்து 394 இலங்கையர்கள் தாயகம் வருகை

ஆகஸ்ட் 19, 2020

கட்டாரிலிருந்து சுமார் 394 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள், கட்டார் எயார்வேஸ் விமான சேவைக்குச் சொந்தமான QR 668 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

மேலும், டுபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK 648 விமானத்தின் மூலம் 17 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான UL 504 விமானத்தின் மூலம் 10 பேரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள், பிசிஆர் பரிசோதனையின் பின்னர் படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.