--> -->

49 கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது

ஆகஸ்ட் 21, 2020

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 49 கிலோகிராம் மற்றும் 700 கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவரை பொலிஸார் நேற்று (20) கைதுசெய்துள்ளனர்.

குறித்த பகுதியில் இருந்து, கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் பரந்தன் முருசமோட்டை பகுதியில் வசிக்கும்  29 வயதுடைய பெண் ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த பெண் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.