--> -->

169 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

ஆகஸ்ட் 21, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் பல மாதங்களாக சிக்கித்தவித்த 169 இலங்கையர்கள் இன்று (21) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கட்டார், ஐக்கிய இராச்சியம், லண்டன் மற்றும் தாய்லாந்து ஆகிய  நாடுகளில் இருந்த இலங்கையர்களே இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 504 மற்றும் UL 403 விமானங்கள் மூலமும் ஐக்கிய இராச்சிய EK648 விமானம் மற்றும் கட்டார் ஏயார்வேஸ் QR668 விமானம் ஆகியவற்றின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் ஜனித் விதாரண தெரிவித்தார். இதற்கமைய, கட்டாரிலிருந்து 45 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 45 பேரும், லண்டனிலிருந்து  02 பேரும் மற்றும் தாய்லாந்திலிருந்து 88 பேரும் வருகை தந்ததாக அவர் தெரிவித்தார்.

விமான நிலையத்திற்கு வருகை தந்த அனைவரும் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளபட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.