--> -->

2789 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பயுள்ளனர்

ஆகஸ்ட் 21, 2020

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைகளில் இருந்து 24 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்து வெளியேறியதை அடுத்து, குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை  2789 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயாளர் பிரிவினால் இன்று (21) வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 08 பேர் மற்றும்  வெலிகந்தை வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்றுவந்த 16 பேருமே இவ்வாறு வீடுதிரும்பியுள்ளதாக தொற்றுநோயாளர் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,918 ஆக பதிவாகியுள்ளதுடன், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 11 என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 118 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.