--> -->

தேடப்பட்டு வந்த நான்கு பாதாள உலக குற்றவாளிகள் சீ சீ டி யினரால் கைது

ஆகஸ்ட் 23, 2020

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தேடப்பட்டு வந்த பாதாள உலக குற்றவாளிகள்  நான்கு பேரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  இன்று  (23) கைது செய்துள்ளனர்.

குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட குற்றச்செயல்கள், பாரியளவிலான  போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் போன்ற குற்றச்செயல்களுக்கான வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் துபாய் நாட்டுக்கு செல்ல முற்பட்ட போது குறித்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    

இதன்போது அவர்களிடம் 9,797,000/= ரூபாய் பணமும் 7,900 அமெரிக்க டாலர்களும் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.

இவர்கள் முகத்துவாரம் மற்றும் வெல்லம்பிட்டிய  பகுதிகளில் வசிக்கும் 30, 32, 43 மற்றும் 45 வயதுகளை உடைய சந்தேக நபர்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.