--> -->

பாதாள உலக குற்றவாளியான ‘பொடி லஸ்ஸி’யின் தாய் பொலிஸாரினால் கைது

ஆகஸ்ட் 25, 2020

போதைபொருள் வியாபார நடவடிக்கை மூலம் பெறப்பட்ட நிதியை கையாண்டமை தொடர்பாக திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பொடி லஸ்ஸி என அழைக்கப்படும் அருமஹந்தி ஜனித் மதுஷங்கவின் தாயார் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   

ஆனமடுவ தெல்வத்த பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய குறித்த சந்தேகநபார் பன்னிப்பிட்டிய மாயா எவனியு பகுதியில் மறைந்திருந்தவேலையில் பேலியகொடையிலுள்ள மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   

கைது செய்யும் போது அவரிடம் இருந்த வங்கிக்கணக்கு புத்தகம் ஒன்றும், ஐந்து கையடக்க தொலைபேசிகள் மற்றும் 51000.00 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (25) ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.