--> -->

நான்கு இலங்கை எயார்லைன்ஸ் விமானமூலம் 275 இலங்கையர்கள் அழைத்துவரப்பட உள்ளனர்

ஆகஸ்ட் 26, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் பல மாதங்களாக சிக்கித்தவித்த 275 இலங்கையர்கள் இன்று (26) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளனர்.

மாலைதீவு, பங்களாதேஷ், ஹொங்கொங், சீனா மற்றும் குவைத் ஆகிய  நாடுகளில் இருந்த இலங்கையர்களே இன்றைய தினம் தாயகம் அழைத்து வர உள்ளதாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார். இவர்கள் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 102, UL 190, UL 1425, மற்றும் UL 230 விமானங்கள் மூலம் வந்தடைய உள்ளனர். இதற்கமைய, மாலைதீவிலிருந்து 60 பேரும், பங்களாதேஷிலிருந்து 18 பேரும், ஹொங்கொங் மற்றும் சீனாவிலிருந்து 40 பேரும் குவைத்திலிருந்து 157 இன்று வருகைதர உள்ளனர்.

விமான நிலையத்திற்கு வருகை தர உள்ள அனைவரும் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளபட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.