--> -->

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1000 kg மஞ்சள் விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஆகஸ்ட் 26, 2020

கற்பிட்டி பிரதேசத்தில் லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 1,000 கிலோகிராம் மஞ்சள் பொதிகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது லொறி ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட குறித்த தொகை மஞ்சள் கைப்பற்றப்பட்டது. எனினும் லொறியின் சாரதி தப்பி சென்றுள்ளார்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tamil