--> -->

துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகளுடன் பெண் ஒருவர் கைது

ஆகஸ்ட் 26, 2020

துப்பாக்கி மற்றும் வெற்று துப்பாக்கி ரவைகளுடன் 42 வயது பெண்ணொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை தங்கொட்டுவ, லிஹிரிய கம பிரதேசத்தில் இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட பெண் இன்றைய தினம் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குழி ஒன்றினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட துப்பாக்கி, 9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய 44 துப்பாக்கி ரவைகள், 12 மில்லி மீற்றர் ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய 45 துப்பாக்கி ரவைகள் மற்றும் 639 வெற்று துப்பாக்கி ரவைகள் ஆகியன என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.