--> -->

வீசா இன்றி தங்கியிருந்த 13 வெளிநாட்டவர்கள் கைது

ஆகஸ்ட் 27, 2020

வீசா காலாவதியான நிலையில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 13 பேர் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பூகொடை விஷேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது  இவர்கள் கல்கிஸ்ஸை, சேரம் வீதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் 20 வயதிலிருந்து  44 வயதுகளுக்குட்பட்ட தாய்லாந்து மற்றும் சீன நாட்டவர்கள் எனவும் அவர்களில் ஒன்பது பெண்களும் நான்கு ஆடவர்களும் அடக்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 10,300 சிகரெட்டுக்களை தம் வசம் வைத்திருந்தார்.

சந்தேக நபர்கள் அனைவரும் இன்றைய தினம் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.