--> -->

2,996 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

செப்டம்பர் 13, 2020

இறுதியாக 13 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதை அடுத்து, குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 2,996 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயாளர் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தெரிவிக்கப்படுகிறது.   

இதன்பிரகாரம் கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலையில் இருந்து எட்டுபேரும், கொழும்பு கிழக்கு தள வைத்தியசாலையில் இருந்துஒருவரும், வெலிகந்தை வைத்தியசாலையில் இருந்து நால்வருமே, இவ்வாறு வீடுதிரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,195 ஆக பதிவாகியுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 187 பேர் வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 12 என்பது குறிப்பிடத்தக்கது.