--> -->

அனுராதபுரத்தில் படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான நடமாடும் சேவை

ஒக்டோபர் 02, 2020

முப்படைகள்,பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு  திணைக்களத்தில் சேவையில்  ஈடுபட்ட சமயம் உயிர்நீர்த்த,  அங்கவீனமுற்ற மற்றும் ஓய்வுபெற்ற படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களின்  நலன்புரி நடவடிக்கைகளை கருத்திக்கொண்டு  ரணவிரு சேவை அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை மற்றும் உத்தம பூஜா பிரணாம பதக்கம்  வழங்கும்  நிகழ்வு 2020 ஒக்டோபர் மாதம் 03 திகதி காலை 0800 மணி முதல் மாலை 0500 மணி வரை பாதுகாப்பு செயளாலர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின்  தலைமையில் சாலியபுர கஜபா ரெஜிமன்ட் தலைமையகத்தில்   நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும்  பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.  

இந்த நிகழ்வில் முப்படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு  திணைக்களத்தின்  தலைவர் மற்றும் ரணவிரு சேவா அதிகார  சபையின் பணிப்பாளர்  நாயகம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

 இந்த நடமாடும் சேவை ஊடாக படைவீர்ர்களின் குடும்ப உறுப்புளர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் உரிய பிரிவுகளுக்கு  சமர்பிக்கப்பட்டு அதற்கான  தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.