--> -->

ராகம வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தொடர்பில் தகவல் தேடும் பொலிஸார்

ஒக்டோபர் 07, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற நபரை தேடி கண்டு பிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி உள்ளனர்

இலக்கம் 307,  கண்டி வீதி, பேலியகொட எனும் முகவரியில் வசிக்கும் 62 வயதுடைய  R. தொன் சரத்குமார என்பவரே இவ்வாறு  தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பெரும் பகுதியான பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலேயே குறித்த நபர் மறைந்திருக்கும் பிரதேசம் தொடர்பாக பொலிஸார்  தேடி வருவதாகவும் இவர் தொடர்பில் தகவல்கள் தெரியும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான நபர்களை பாதுகாக்கும் மற்றும் மறைத்து வைக்கும் நபர்களுக்கு எதிராக  தனிமைப் படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.