--> -->

கொட்டகல பகுதியில் வீழ்ந்த பாரிய கற்பாறை ஒன்றை இராணுவத்தினர் அகற்றியுள்ளனர்

ஒக்டோபர் 08, 2020

கொட்டகல பகுதி மக்களின் இரு பக்கங்களுக்குமான போக்குவரத்தினை தடைசெய்யும் வகையில் வீதியின் நடுவே வீழ்ந்த பாரிய கற்பாறை ஒன்றை அனர்த்த நிலைமைகளின் போது ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

போக்குவரத்தினை தடைசெய்யும் வகையில் மண்சரிவு மூலம் வீழ்ந்த கற்பாறை உட்பட அனைத்து தடைகளையும் அகற்றுவதற்கு இராணுவவீரர்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினருக்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.

Tamil