--> -->

கொழும்பு பிரதான பயணிகள் பேருந்து நிலையம் கடற்படையினரால் கிருமி தொற்று நீக்கம்

ஒக்டோபர் 08, 2020

பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவரும் இலங்கை கடற்படையினரர், கொழும்பு கோட்டையில் மாகாணங்களுக்கிடையிலான பிரதான பயணிகள் போக்குவரத்து நிலையங்களில் கிருமி தொற்று நீக்க செயற்பாடுகளை நேற்று (ஒக்டோபர், 8) முன்னெடுத்துள்ளனர்.
 
குறித்த மாகாணங்களுக்கிடையிலான பிரதான பயணிகள் போக்குவரத்து நிலையங்களுக்கு தொடர்ச்சியாக பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் வந்துசெல்வதை இட்டு குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் ஆலோசனைகளுக்கு ஏற்ப குறித்த செயற்பாடுகளை, இலங்கை கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பிரிவானது இத்தொற்று நீக்க செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

Tamil