--> -->

மினுவாங்கொட பொலிஸ் அதன் நடவடிக்கைகளை தொடர்கிறது - டி.ஐ.ஜி அஜித் ரோஹனா

ஒக்டோபர் 08, 2020

மினுவாங்கொடை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்துள்ளதுடன், கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு  சுகாதார நடவடிக்கைகளை பேணி மீண்டும் பொலிஸ் அதன் நடவடிக்கைகளை தொடர்வதாக பொலிஸ் சட்டம், ஒழுங்குகளுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகணா பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
     
ஏனைய பொலிஸ் நிலையங்களில் இருந்து மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இணைப்புபெற்ற பொலிஸ் அதிகாரிகள் தமது வழமையான செயட்பாடுகை இங்கு தொடர்ந்தும் முன்னெடுத்து வருவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், வைரஸ் தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.