--> -->

கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

ஒக்டோபர் 10, 2020

விஷேட புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று மாலை (ஒக்டோபர், 09) பதுளையில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மெகசின் ஒன்றுடன் ஆறு வெடிபொருட்கள் ஆகியவற்றை 250,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.  

பதுளை நீதவான் நீதிமன்றத்தில் பணியாற்றும் சிற்றூழியரான குறித்த சந்தேகநபர் ஹல்துமுள்ள பகுதியில் வசிக்கும் 37 வயதுடைய ஒருவராகும் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (ஒக்டோபர்,10) ஆஜர்படுத்தப்பட உள்ளார்.