--> -->

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1186 ஆக அதிகரிப்பு –கொவிட் மையம்

ஒக்டோபர் 11, 2020

மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணியாற்றிய இருவர் மற்றும் குறித்த கொத்தணியில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 103 பேர் அடையாலம்கானபட்டதை அடுத்து கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1186 ஆக அதிகரித்துள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை,  கட்டார் நாட்டின் தோஹா நகரில் இருந்து கிவ் ஆர் 668 எனும் இலக்க விமானத்தில் இன்று இலங்கைக்கு வருகைதந்த 44 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.