--> -->

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3317 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்

ஒக்டோபர் 13, 2020

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பத்து பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதை அடுத்து,  கொரோனா வைரஸ் தொற்றுலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3317ஆக உயர் வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு குணமடைந்து வீடு திரும்பியோரில் இருவர் வெலிக்கடை வைத்தியசாலையிலிருந்தும், நால்வர்  ஐ டீ எச் வைத்தியசாலையிலிருந்தும், ஏனைய நால்வர் இரணவில வைத்தியசாலையிலிருந்தும் வெளியேறியுள்ளதாக  தொற்று நோயியல் பிரிவு தெரிவிகின்றது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 4,844 ஆக அதிகரித்துள்ளதுடன், இவர்களில் 1,514 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், இதுவரை 13 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.