--> -->

அரச, தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் விபரங்கள் புதுப்பிப்பு

ஒக்டோபர் 13, 2020

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் விபரங்களை சேகரித்து பதிவு செய்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அவசர தேவைகளை கருத்திற் கொண்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களின் சரியான தகவல்களை சேகரிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.