--> -->

கொரோனா வைரஸ் நிலைமைகள்; 6,190 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

ஒக்டோபர் 14, 2020

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட  பிசிஆர் பரிசோதனைகளின் போது 194 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால்  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,038 பதிவாகியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் புதிய தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டதையடுத்து மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,591.ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 342,343 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் மாத்திரம் 6,190 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு,  படையினரால் நிர்வாகிக்கப்படும் 84 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 9,905 பேர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை  தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த 52,090 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.  

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த நிலையில் வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் சிகிச்சையின் பின் இன்று காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.