--> -->

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் என்னின்னிகை 2342 ஆக உயர்வு

ஒக்டோபர் 21, 2020

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் புதிதாக தொற்றுக்குள்ளான மேலும் 120பேர் அடையாளங்காணப்பட்டதையடுத்து அந்த கொத்தணியில் வைரஸினால்  பாதிக்கப்பட்டவர்களின் என்னின்னிகை 2342 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5811 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று  நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2341 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அதேவேளை,  3457 பேர் சிக்சிச்சையின் பின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்ட்டுள்ளனர்.