--> -->

மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸ் தொட்டியிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 137 ஆக அதிகரிப்பு

ஒக்டோபர் 31, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 633 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மொத்த எண்ணிக்கை 10,424 ஆக உயர்வடைந்துள்ளது சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த 60,079 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 137 பேர் இன்றைய தினம் பூரண குணமடைந்துள்ளனர்.

மேலும், மினுவாங்கொடை  கொத்தணியில் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,946ஆக அதிகரித்துள்ள அதே வேளை, அவர்களில் 1,041 பேர் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, படையினரால் நிர்வகிக்கப்படும் 60 தனிமைப்படுத்தல் மையங்களில் மொத்தமாக 5,760 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

நாட்டில் இதுவரை 502,669 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 12,106 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.