--> -->

தீப்பற்றிய மீன்பிடி படகு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டது

நவம்பர் 08, 2020

தெற்கு கடற்பரப்பில் மீன்பிடி படகு ஒன்றில் ஏற்பட்ட தீ இலங்கை கடற்படையினர் அடைக்கப்பட்டு அப்படகு பாதுகாப்பாக  கரைக்கு கொண்டு வரப்பட்டது.

அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக் நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த படகு ஒன்று கரைக்கு திரும்பும் வழியில் கொக்கல கடற்பரப்பில் வைத்து தீப்பற்றிக் கொண்டது.

இதனையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்த  தெற்கு கடற்படை கட்டளையைகத்தின் கீழ் உள்ள ஆழ்கடல் ரோந்து படகு(IPC), மீன்பிடி படகில் ஏற்பட்ட தீயினை அணைத்து அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிவிரைவு தாக்குதல் படகு (FAC) நிற்கதியான நிலையிலிருந்த குறித்த தீப்பிடித்த படகினை பாதுகாப்பாக காலி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்ததாகவும் சம்பவத்தில் மீனவர் எவருக்கும் காயங்கள் ஏற்பட வில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.