--> -->

மானிப்பாயில் கைவிடப்பட்ட நிலையில் முருகர் சிலை பொலிஸாரால் கண்டுபிடிப்பு

நவம்பர் 09, 2020

கைவிடப்பட்ட நிலையில் 7 அங்குல உயரமுள்ள முருகக் கடவுளின் சிலை, மூன்று மயில்  சிலைகள் மற்றும் அடையாளம் காணப்படாத உலோகப் பாத்திரங்கள் என்பவற்றை  மணிப்பாய் பொலிஸார் நேற்று கைப்பற்றினர்.  யாழ்ப்பாணம்  மணிப்பாய் சங்கனாய் கோவில் அருகே பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  இந்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

சங்கனாயில் உள்ள இராணுவத்தின்  11வது இலேசாயுத படைவீரர்களால் இந்த பொருட்கள் தொடர்பாக அப்பகுதி பொலிஸாருக்கு  வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.