--> -->

தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த 64,075 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

நவம்பர் 10, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 356 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டதையடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,285 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றய தினம் அடையாளம் காணப்பட்ட 356 பேரும் உள் நாட்டைச் சேர்ந்தவர்கள் என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உற்படுத்தப்பட்டிருந்த 64,075 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம், மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10,807 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர்களில் 1,041 பேர் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் என தெரிவித்துள்ளது.

மேலும் படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 27 தனிமைப்படுத்தல் மையங்களில் 2,362 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை 610,836 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 7,986  பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.