--> -->

10,514 பீசிஆர் பரிசோதனைகள் நோற்று முன்னெடுப்பு

நவம்பர் 22, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 496 பேர் நேற்றைய தினம்  அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டினல் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,771 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களில்  இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த இலங்கை பிரஜைகளும் அடங்குவதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணிகளில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 16,240 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் 10,514 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாகவும் இதில் வைரஸ் தொற்றுக்குள்ளான 401 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் வெள்ளம்பிட்டிய, தெமட்டகொடை, களுத்துறை, வெள்ளவத்தை, வத்தளை, கொழும்பு 02, கொழும்பு 10 மற்றும் கொழும்பு 13  பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இதற்கமைய வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83ஆக  பதிவாகியுள்ளது.

படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 39 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார்4,193 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.