--> -->

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்பு வருகை

நவம்பர் 27, 2020

இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு கடல்சார் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவால் கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியா, இலங்கை மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4 வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு மாநாடு  சனிக்கிழமை இடம்பெற உள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்த  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கை பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.