--> -->

கொரிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஒக்டோபர் 05, 2023

கொரிய குடியரசின் தூதுவர் அதிமேதகு மியோன் லீ இன்று (ஒக். 5) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது புது டில்லியில் உள்ள கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் (கடற்படை) சோய் யோங்சோக் சமூகமளித்திருந்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த கொரிய தூதுவரை ஜெனரல் குணரத்ன அன்புடன் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன, இரு நாடுகளுக்கும் இடையே கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிவு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடினார் .

கலந்துரையாடலின் முடிவில், ஜெனரல் குணரத்ன மற்றும் கொரிய தூதுவர் லீ ஆகியோர் நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதரவும் கலந்துகொண்டார்.