--> -->

இமதுவயில் மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்துக்கு
இராஜாங்க அமைச்சர் தென்னகோன் விஜயம்

ஒக்டோபர் 12, 2023

இமதுவை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட இடத்தின்  நிலைமைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (ஒக்டோபர் 12) அப்பிரதேசத்திற்கு விஜயம்  மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின்போது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் அமைச்சருடன் இணைந்து கொண்டனர்.

மண் சரிவினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் தென்னகோன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பெற்று மண் சரிவினால் பாதிக்கப்பட்ட நெடுஞ்சாலையை துப்பரவு செய்து வாகன போக்குவரத்திணை சீர் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத்தினருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மேலும் இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு விளைவித்துள்ளதோடு, சொத்துக்களுக்கும் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் அறிவுரை வழங்கினார்.