--> -->

சேவைக் காலம் முடிந்து செல்லும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஒக்டோபர் 16, 2023

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கெப்டன் விகாஷ் சூட் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஒக்.16) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சிக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், பின்னர் முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இலங்கையில் தான் கடமையாற்றிய காலத்தில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஒத்துழைப்புக்காக கெப்டன் விகாஷ் சூட் பாதுகாப்பு செயலாளருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும், இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்த அவர்கள், அத்தகைய நல்லெண்ணம் மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் சேவையைப் பாராட்டிய ஜெனரல் குணரத்ன, அவரது பதவிக் காலத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பாதுகாப்பு செயலாளரினால் கெப்டன் விகாஷ் சூட் அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் நதீக குலசேகரவும் கலந்து கொண்டார்.