--> -->

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும்

நவம்பர் 10, 2023

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் அதிமேதகு சாண்டில் எட்வின் ஷால்க், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர் 10) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த தென்னாபிரிக்கத் தூதுவர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவிற்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MOU) நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால ஒத்துழைப்பையும் இருதரப்பு மூலோபாய உறவுகளையும் மேலும் மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. ஹர்ஷ விதானராச்சி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.