--> -->

எகிப்திய தூதுவர் இராஜாங்க அமைச்சர் தென்னகோனை சந்தித்தார்

டிசம்பர் 13, 2023

இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு மாஜித் மோஸ்லே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (டிசம்பர் 13) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் எகிப்திய தூதுவருடன் சுமுகமான கலந்துரையாடலை நடத்தினார்.

இந்த உரையாடலின் போது, பாதுகாப்பு, மற்றும் மூலோபாய கூட்டாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தூதுவர் மொஸ்லே, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகால உறவுகளைப் பேணுவதில் இலங்கையின் முயற்சிகளைப் பாராட்டினார்.

எகிப்திய தூதுவர் மற்றும் இராஜாங்க அமைச்சருக்கு இடையிலான இந்தச் சந்திப்பு, இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.