--> -->

வைரஸ் தொற்றிலிருந்து குனமடைந்தவர்களின் எண்ணிக்கை 715 ஆக பதிவு

டிசம்பர் 21, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 594 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 37,260 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய  தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிநாட்டில் இருந்து வருகை  தந்த இரண்டு பேரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 253 பேரும், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 124 பேரும் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 153 பேரும் உள்ளடங்குவதாக  கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 33,586 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 24,859 பேர் வைரஸ்  தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 13,831 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 77 இலங்கையர்கள் வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ளனர். அவர்களில் 25 பேர் கட்டாரிலிருந்தும் 52 பேர் சவூதி அரேபியாவிலிருந்து வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் இராணுவத்தினரால் மேற்பார்வை செய்யப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்றைய தினம் வைரஸ் தொற்றிலிருந்து குனமடைந்தவர்களின் எண்ணிக்கை  715 ஆக பதிவாகியுள்ளது.

நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குனமடைந்தவர்களின் எண்ணிக்கை  28,266 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 72 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 6,878 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான ஐந்து   பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 176 ஆக  அதிகரித்துள்ளது