--> -->

இலங்கை கடற்படை கப்பலான விஜயபாகுவில் அமெரிக்க பிரதிநிதிகளை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்தித்தார்

பெப்ரவரி 24, 2024

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் ஆர். வர்மா, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி. ஜூலி சன்ங் மற்றும் அந்நாட்டுப் பிரதிநிதிகள் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 23) சந்தித்தார்.

இலங்கை கடற்படைக் கப்பலான விஜயபாகு கப்பலில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் அமைச்சருடன் கலந்து கொண்டார் என கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றன.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் தென்னகோன், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த இராஜதந்திர உறவுகள், குறிப்பாக கடல்சார் துறையில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு உத்திகள் மற்றும் திறன்களை கணிசமான அளவில் மேம்படுத்தியுள்ளது. இந்த உறவின் விளைவாக, கடற்படையால் பாரம்பரியமற்ற கடல்சார் சவால்களை திறம்பட எதிர்கொள்வதுடன், இலங்கையின் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கான தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது என்றும் அவர் கூறினார். இலங்கையுடனான தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பங்காளித்துவத்திற்காக அமெரிக்காவிற்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இலங்கையுடனான தனது கடல்சார் பாதுகாப்பு பங்காளித்துவத்திற்கும் இலங்கை கடற்படையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதி செயலாளர் வர்மா தெரிவித்தார். அமெரிக்காவிலிருந்து இலங்கை கடற்படைக்கு மற்றுமொரு கடல்சார் ரோந்துக் கப்பலை (OPV) வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வின் போது, இலங்கை கடற்படைக்கு அமெரிக்காவிலிருந்து கிடைத்த கப்பல்கள் கடற்படையின் திறன்களை மேம்படுத்தும் வகையில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்கு திறம்பட ஆதரவளிப்பதாகவும் கடற்படைத் தளபதி தெரிவித்தார். மேலும், கடற்படையின் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு, தீவு நீர் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதி (IOR) மற்றும் உயர் கடல் ஆகிய இரண்டையும் பாதுகாக்க இலங்கை கடற்படையின் கடற்படை பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகள், இலங்கை கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, மேற்கு கடற் பிராந்திய பிரதி கட்டளைத் தளபதி தளபதி கொமடோர் தம்மிக்க விஜேவர்தன, இலங்கை கடற்படை விஜயபாகு கப்பலின் கெப்டன் நளின் கோனகல உட்பட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.