--> -->

நாட்டில் 13,860 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு

டிசம்பர் 22, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 370 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 37,630ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய  தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிநாட்டில் இருந்து வருகை  தந்த ஆறு பேரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 253 பேரும், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 67 பேரும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த  46 பேரும், ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 150 பேரும் உள்ளடங்குவதாக  கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 33,950 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 25,274 பேர் வைரஸ்  தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 13,860 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 112 இலங்கையர்கள் வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ளனர். அவர்களில் 50பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திளிருந்தும் 35 பேர் கட்டாரிலிருந்தும் 27பேர் லெபனானிலிருந்தும் வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் இராணுவத்தினரால் மேற்பார்வை செய்யப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வைரஸ் தொற்றிலிருந்து குனமடைந்த 415 பேர்  நேற்றைய தினம்  வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.   

நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குனமடைந்தவர்களின் எண்ணிக்கை  28,681 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 72 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 8,773 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான உயிரிழபுக்கள் எதுவும் பதிவாகவில்லை. இதற்கமைய நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 176 ஆக  பதிவாகியுள்ளது.