--> -->

இரணமடு விமானப் படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 159 பொதுமக்கள் வெளியேறினர்

டிசம்பர் 30, 2020

இந்தியா, துருக்கி, கட்டார் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய 159 பேரே தமக்கு நிர்ணயிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் காலத்தை உரிய முறையில் நிறைவு செய்து இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து நேற்று (டிசம்பர் 29) வெளியேறினர்.

மேலும் 14 நாட்களுக்கு தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை மேலும் தெறிவித்தது.