16வது தேசிய போர்வீரர் நினைவு விழா பிரதான நிகழ்வு கொழும்பில்
மே 16, 202516வது தேசிய போர்வீரர் நினைவு விழா இம்மாதம் 19ஆம் திகதி கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுராவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் நடைபெறவுள்ளது.
இதன் பிரதான நிகழ்வு எதிர்வரும் 19 ஆம் திகதி மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது .
ஜனாதிபதியின் பிரதிநிதியாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்களின் முன்னிலையில் நடைபெறும்.
போர் வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினரால் நாடு தழுவிய சமூக நலத் திட்டங்களும் மேற்கொள்ளப்படும்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
16வது தேசிய போர்வீரர் நினைவு விழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட செயலாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சில் இன்று (மே 16) நடைபெற்றது,
செய்தியாளர் மாநாட்டிற்கு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமை தாங்கினார்.
தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த முப்படைகளின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த வருடாந்த நினைவு தினத்தின் தேசிய முக்கியத்துவத்தை பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.
உயிரிழந்த ஆயுதப்படை வீரர்களின் நினைவைப் பாதுகாப்பதில் அமைச்சு மற்றும் முப்படைகளின் உறுதியான அர்ப்பணிப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார்,
அவர்களின் தேசபக்தி, தியாகம் மற்றும் கடமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை எதிர்கால சந்ததியினரை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது, சிறப்பு அதிதிகள், ராணுவ வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்பங்களின் பங்கேற்புடன், மலர் அஞ்சலி செலுத்தல், மற்றும் இராணுவ மரியாதைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் தன்னலமின்றி பணியாற்றியவர்களுக்கு தேசம் தனது ஆழ்ந்த நன்றியையும், அசைக்க முடியாத மரியாதையையும் வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக இந்த நிகழ்வு அமைகிறது.
நாட்டின் போர் வீரர்களை நினைவுகூருவதில் ஒற்றுமையுடன் நிற்குமாறு பாதுகாப்பு அமைச்சு அனைத்து மக்களையும் அழைக்கிறது, நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்பதில் அவர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்துகிறது.
முப்படை தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான இலத்திரன் மற்றும் அச்சு ஊடக பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்