08 வது இலங்கை - இந்திய பாதுகாப்பு கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது
ஜூன் 05, 2025இலங்கை - இந்திய பாதுகாப்பு கலந்துரையாடல் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (ஜூன் 05) நடைபெற்றது.
இலங்கை தூதுக்குழுவிற்கு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமை தாங்கினார், அத்துடன் இந்திய பாதுகாப்பு செயலாளர் திரு. ராஜேஷ் குமார் சிங் இந்திய தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார்.
இதன் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பயிற்சி மற்றும் மூலோபாய ஈடுபாட்டில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்தல் போன்ற விடயங்கள் குறித்து உயர்மட்ட உரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாட்டு சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடல்களில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பாதுகாப்பு செயலாளர் இன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவையும் (ஓய்வு) சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.