துருக்கிய கடற்படைக் கப்பலான 'TCG BÜYÜKADA' உத்தியோகபூர்வ
விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது
ஜூன் 13, 2025
துருக்கியக் கடற்படைக் கப்பலான 'TCG BÜYÜKADA' இன்று காலை (2025 ஜூன் 13) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்த நிலையில், இலங்கைக் கடற்படை குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த CORVETTE வகைக்கு சொந்தமான 'TCG BÜYÜKADA' என்ற கப்பலானது 99.56 மீற்றர் நீளமும், மொத்தம் 147 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் அனில் BİLGİN பணியாற்றுகிறார்.
'TCG BÜYÜKADA' கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் குழுவினர் தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், ‘TCG BÜYÜKADA’ கப்பல் தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு, 2025 ஜூன் 16 ஆம் திகதி அன்று தீவிலிருந்து புறப்பட உள்ளதுடன், மேலும் இலங்கை கடற்படைக் கப்பலுடன் மேற்கு கடற்படை கட்டளைப் பகுதியில் கடற்படைப் பயிற்சியில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நன்றி - www.navy.lk